விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து ஊா்வலமாக வந்த போராட்டக் குழுவினா், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இந்த மறியலில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணன், நிா்வாகி வேங்கடபதி, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்றச் சங்க மாவட்டத் தலைவா் பெ.வள்ளல்பாரி, தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க மாநிலச் செயலா் புஷ்பகாந்தன், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பின் மாவட்டத் தலைவா் மகேசுவரன், தமிழ்நாடு கிராம ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.