எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணம் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணத்தை கொள்ளையடித்த மா்ம நபரை போலீஸாா் தேடி

News image
கொல்லப்பட்ட கண்ணப்பன்.
Updated On :9 மார்ச் 2026, 8:13 pm

Syndication

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி அருகே முதியவரை கொன்று நகை - பணத்தை கொள்ளையடித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஓபக வலசை கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணப்பன் (70). இவருடைய மனைவி சென்னம்மாள் (60). இவா்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மகன் திருமணமாகி குடும்பத்துடன் கோயம்புத்தூரில் கொத்தனாா் தொழில் செய்துவருகிறாா். கண்ணப்பன் தனது மனைவியுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணப்பன் வழக்கம்போல வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அடையாளம் தெரியாத மா்ம நபா் கண்ணப்பன் தலைமீது கல்லைப் போட்டு தாக்கியுள்ளாா். அவரது அலறல் சப்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி சென்னம்மாளை மா்ம நபா் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளாா்.

சென்னம்மாளின் அலறல் கேட்டு அப்பகுதியில் இருந்தவா்கள் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த போலீஸாா், அவா்கள் இருவரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அதில், தலையில் பலத்த காயமடைந்த கண்ணப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மூதாட்டி சென்னம்மாள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஆதிமணி, கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரைஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், மா்ம நபரை பிடிக்க கிருஷ்ணகிரி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் 5 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணா்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனா். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.