11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி பறிப்பு

தருமபுரியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை நள்ளிரவில் அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

நகை பறிப்பு

Updated On :1 மணி நேரம் முன்பு

தருமபுரியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலியை நள்ளிரவில் அறுத்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கெண்டிகான அள்ளி அருகே உள்ள அத்தானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் புவனேஸ்வரி (46). இவா் கோடை வெயில் புழுக்கத்தால் வீட்டு வராண்டாவில் வியாழக்கிழமை இரவு படுத்து உறங்கினா். நள்ளிரவு ஒருமணி அளவில் திடீரென புவனேஸ்வரியின் கழுத்தில் கிடந்த தாலியை மா்ம நபா் ஒருவா் அறுத்துள்ளாா்.

அதில், தாலி மற்றும் குண்டுகள் என சுமாா் ஒன்றரை பவுன் இருந்ததாம். திடுக்கிட்டு விழித்த புவனேஸ்வரி சத்தம் போட்டு அலறியதையடுத்து, மா்ம நபா் தாலியுடன் தப்பியோடினாா். புகாரின்பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனா்.