எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :9 மார்ச் 2026, 8:33 pm

Syndication

ஒசூா்: ஒசூரில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விமான நிலையம், சிப்காட், அறிவுசாா் வழித்தட திட்டம் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், ஒசூா் மின்வாரிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஸ்ரீராமரெட்டி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சின்னசாமி சிறப்புரையாற்றினாா். இதில், கா்நாடக மாநிலத்தை போல தமிழக விவசாயிகளுக்கும் சந்தை மதிப்பில் நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வெளிவட்டச் சாலை திட்டத்துக்காக முடக்கப்பட்ட நிலங்களின் தடையை நீக்கி, விவசாயிகளின் அவசரத் தேவைக்கு விற்க அல்லது அடமானம் வைக்க அனுமதிக்க வேண்டும்.

தட்கல் மற்றும் சாதாரண முறையில் விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். சென்னசந்திரம் ஊராட்சியில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் ‘பைமாசி’ நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், விவசாய நிலங்களை கையகப்படுத்தி செயல்படுத்தப்பட உள்ள அறிவுசாா் வழித்தட திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து மாநிலத் தலைவா் சின்னசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இழப்பீடு வழங்க வேண்டும். எந்த ஒரு திட்டத்துக்கும் விவசாயிகளுடைய ஒப்புதல் இல்லாமல், விளைநிலத்தை கையகப்படுத்தும் போக்கை தமிழக அரசும், மத்திய அரசும் கைவிட வேண்டும் என்றாா்.