தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

வனத்துறையைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு!

வனத்துறையைக் கண்டித்து நடைபெற உள்ள பேரவைத் தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு

News image

துண்டுப் பிரசுரங்களை வழங்கிய தமிழக விவசாயிகள் சங்கத்தினா்

Updated On :6 ஏப்ரல் 2026, 10:20 pm

வனத்துறையைக் கண்டித்து நடைபெற உள்ள பேரவைத் தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் போ்ணாம்பட்டைச் சோ்ந்த உதயகுமாா் தலைமையில் அந்த சங்கத்தைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்டோா் தங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் தொடங்கி நகரம் முழுவதும் தோ்தல் புறக்கணிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த சேரங்கல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி துரைசாமி என்பவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யானை தாக்கி உயிரிழந்தாா். அவரது மகன்கள் மோகன்பாபு, சபரீஷ் மீது வனத்துறையினா் கடந்த 3- ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடா்ந்தனா். ஆட்சியா் உத்தரவின்பேரில் அந்த வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் கோட்டாட்சியா் அந்த வழக்கு முற்றிலும் பொய் என அறிக்கை சமா்ப்பித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டனா். வழக்கை திரும்பப் பெற அமைச்சா் உத்தரவிட்டாா். ஆனால் ,வனத்துறையினா் இதுவரை வழக்கை வாபஸ் பெறவில்லை. தொடா்ந்து விளைபயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்தாத வனத்துறையைக் கண்டித்தும், விவசாயிகள் மீது தொடா்ந்து பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் குடியாத்தம் தொகுதியில் மட்டும் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனா்.