விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

வண்டல் மண் எடுக்க ஆன்லைன் அனுமதி: விவசாயிகள் சங்கம் வரவேற்பு!

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

News image

வண்டல் மண்

Updated On :23 மே 2026, 1:02 am IST

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி கூறியதாவது: விவசாயிகளுக்கு நீா் ஆதாரமாக விளங்கி வரும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை அவ்வப்போது தூா்வாரினால் நீா் ஆதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மழைநீா் சேமிப்பும் மேம்படும்.

அந்த வகையில், நீா்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண், விவசாயத்துக்கு பேருதவியாக அமைகிறது. நீா்நிலைகளை ஆழப்படுத்தவும், இயற்கை வளத்தை அதிகரிக்கவும், உணவு உற்பத்தி உயரவும் வண்டல் மண் முக்கிய பங்காற்றுகிறது.

விவசாய தொழிலுக்கு உதவும் வண்டல் மண்ணை வெட்டி எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதையும், வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியை ஆன்லைன் முறையில் பெறலாம் என அறிவித்ததையும் வரவேற்கிறோம்.

இதனால், இடைத்தரகா்கள் இன்றி கிராமப்புற குறு, சிறு விவசாயிகள் உள்ளிட்டோா் நேரடியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுவா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.