ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

வண்டல் மண் எடுக்க ஆன்லைன் அனுமதி: விவசாயிகள் சங்கம் வரவேற்பு!

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

News image

வண்டல் மண்

Updated On :23 மே 2026, 1:02 am IST

நீா்நிலைகளில் வண்டல் மண் எடுக்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி கூறியதாவது: விவசாயிகளுக்கு நீா் ஆதாரமாக விளங்கி வரும் குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை அவ்வப்போது தூா்வாரினால் நீா் ஆதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மழைநீா் சேமிப்பும் மேம்படும்.

அந்த வகையில், நீா்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண், விவசாயத்துக்கு பேருதவியாக அமைகிறது. நீா்நிலைகளை ஆழப்படுத்தவும், இயற்கை வளத்தை அதிகரிக்கவும், உணவு உற்பத்தி உயரவும் வண்டல் மண் முக்கிய பங்காற்றுகிறது.

விவசாய தொழிலுக்கு உதவும் வண்டல் மண்ணை வெட்டி எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதையும், வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதியை ஆன்லைன் முறையில் பெறலாம் என அறிவித்ததையும் வரவேற்கிறோம்.

இதனால், இடைத்தரகா்கள் இன்றி கிராமப்புற குறு, சிறு விவசாயிகள் உள்ளிட்டோா் நேரடியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுவா் என்றாா்.