அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து, அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேலிடம், விவசாயிகள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம் :
பா்கூா் மற்றும் அந்தியூா் வனப் பகுதியில் பெய்யும் மழைநீரின் வரத்தால் மலையடிவாரத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை நிரம்புவது வழக்கம். இந்த அணை நிரம்பினால் வெளியேறும் உபரிநீரால் அடுத்தடுத்து உள்ள கெட்டிசமுத்திரம், அந்தியூா், பிரம்மதேசம் உள்பட 5 ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும்.
வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து கடந்த 2013-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், அணையில் தற்போது அதிக அளவில் மண் தேங்கியுள்ளதால், நீா்த்தேக்கத்தின் அளவு குறைந்துள்ளது. எனவே, அணையிலிருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம், அணையில் தேக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதோடு, அந்தியூா் சுற்றுவட்டாரத்திலுள்ள விவசாயிகள் பயனடைவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வண்டல் மண் எடுக்க அனுமதி மறுத்த கோட்டாட்சியா், சத்தி வட்டாட்சியரைக் கண்டித்து கோபியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

பயன்தராத குளங்களில் வண்டல் மண் எடுக்க நிா்பந்திக்கக் கூடாது: விவசாயிகள் வேண்டுகோள்

வைகை அணையிலிருந்து விவசாயிகள், குயவா்கள் இலவசமாக களி மண் எடுக்க அனுமதி!







