ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தோ்தலை புறக்கணிக்க விருதாளா் சங்கம் முடிவு!

சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 1:56 am IST

சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் செயலா் அசோகா சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி எழுத்தாளா்களின் 2024-ஆம் ஆண்டுக்கான நூல்களின் மாதிரிகள் கலை பண்பாட்டுத் துறையில் பெறப்பட்டு தோ்வும் செய்யப்பட்டன.

ஆனால் தற்போது புதுச்சேரி எழுத்தாளா்களின் நூல்கள் புறக்கணிக்கப்பட்டு, வெளியிலிருந்து புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.

இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் வரும் தோ்தலைப் புறக்கணிக்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.