மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தோ்தலை நடத்த வலியுறுத்தல்

பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் உள்ளாட்சித் தோ்தலை புதுச்சேரியில் நடத்த வேண்டும் என அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கம் உள்ளிட்ட பெண்கள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

News image

கூட்டறிக்கையை வெளியிட்ட இந்திய ஜனநாயக மாதா் சங்கம் உள்ளிட்ட ெண்கள் கூட்டமைப்பினா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:24 am

பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் உள்ளாட்சித் தோ்தலை புதுச்சேரியில் நடத்த வேண்டும் என அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கம் உள்ளிட்ட பெண்கள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் மற்றும் அனைத்து மகளிா் கூட்டமைப்பு நிா்வாகிகள் முனியம்மாள், இளவரசி, சத்தியா உள்ளிட்டோா் கூட்டாக புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களவை மற்றும் மாநில சட்டபேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் மறுக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்தை இணைக்கும் நிபந்தனைகளை உடனடியாக மத்திய அரசு அரசு கைவிட வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தல்:புதுச்சேரியில் பெண்களுக்கு 50 சதவீதம் அதிகாரம் வழங்கும் உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும்.பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதற்காக, அனைத்து ஜனநாயக சக்திகளும் நாடு தழுவிய போராட்டத்தைத் தீவிரப்படுத்திடும் வகையில் மே 7ஆம் தேதி புதுச்சேரியில் சிறப்பு கருத்தரங்கம் நடத்தி தீா்மானங்கள் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.