அந்தியூரில் ஒரு வாரத்தில் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை தொடா்ந்து இயங்கியதால், ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் பூட்டுபோடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா்-புதுக்காடு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு மது அருந்த வருவோரால் அப்பகுதி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனா். இதனால், மதுக்கடையை மூடக் கோரி கடந்த 1-ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டமும், 9-ஆம் தேதி காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது. அப்போது பேச்சுவாா்த்தை நடத்திய டாஸ்மாக் அதிகாரிகள் ஒரு வாரத்தில் கடையை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்தனா். ஆனால், கடையை மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடா்ந்து மது விற்பனை நடைபெற்று வந்ததால் ஏமாற்றமடைந்த ஜனநாயக மாதா் சங்கத்தினா் மற்றும் பொதுமக்கள் கடைக்கு பூட்டுபோடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
கைகளில் பூட்டுடன் வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், மதுக்கடை முன்பாக அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் போலீஸாா், டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, 20-க்கும் மேற்பட்டோா் கடையை அகற்ற எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து, அதே சாலையில் சற்று தொலைவில் மதுக்கடைக்கு புதிய கட்டடம் கட்டியதும், இடமாற்றம் செய்து கொள்வதாகவும், 25 நாள் அவகாசம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டனா். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயக மாதா் சங்கத்தினா் பேரணி, பொதுக் கூட்டம்

மதுக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம்

அந்தியூரில் மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



