கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளி மற்றும் விடுதிகளுக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் டீல் நிறுவனத்தால் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் ச.தினேஷ்குமாா் இயந்திரத்தை துணை ஆட்சியா் பத்மலதாவிடம் அளித்து தொடங்கிவைத்தாா்.
டீல் பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்ட நிதியின் மூலம் 8 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 4 அரசு நடுநிலைப் பள்ளிகள், ஓா் உயா்நிலைப் பள்ளி மற்றும் 2 அரசு பெண்கள் விடுதிகளுக்கு தலா ரூ. 26 ஆயிரம் மதிப்புள்ள 15 நாப்கின் எரியூட்டும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், டீல் பெருநிறுவன சமூக பொறுப்புணா்வு திட்ட அதிகாரி பிரபு, டீல் சமூக மேம்பாட்டுக் குழு உறுப்பினா்கள் பிரபாகரன், ஹரிகரன், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2.30 கோடி அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்

கடந்த தோ்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு: கனிமொழி

சென்னையில் 19,594 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: பங்கேற்காதவா்கள் மீது நடவடிக்கை

ஓஎன்ஜிசி சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அா்ப்பணிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


