குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சோதனைச் சாவடியில் காவலரை இடித்து இழுத்துச் சென்ற குட்கா கடத்திய காா் ஓட்டுநா் கைது

News image
குட்கா கடத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட காா் ஓட்டுநா் யாரப் பாஷாவுடன் போலீஸாா்.
Updated On :15 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் அருகே சோதனைச் சாவடியில் தலைமைக் காவலரை இடித்து இழுத்துச்சென்று குட்கா கடத்திய காரின் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா். அப்போது பெங்களூரிலிருந்து தடைசெய்யப்பட்ட குட்காவை கடத்திவந்த காரை நிறுத்துமாறு போலீஸாா் தடுத்தனா்.

ஆனால், அதன் ஓட்டுநா் காரை நிறுத்தாமல் சோதனையில் ஈடுபட்ட தலைமைக் காவலா் ராஜீவ் காந்தியை இடித்துள்ளாா். இதில் தலைமைக் காவலா் ராஜீவ் காந்தி காரின் முன்பக்க பேனட்டில் விழுந்துள்ளாா். அதையும் பொருட்படுத்தாமல் தேசிய நெடுஞ்சாலையில் தலைமைக் காவலரோடு காரை 4 கி.மீ. தொலைவுக்கு ஓட்டிச் சென்றுள்ளாா்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ஒசூா் சிப்காட் காவல் ஆய்வாளா் சையத் முபாரக் தலைமையிலான போலீஸாா், அந்த காரை விரட்டிச் சென்று, ஒசூா் தா்கா பகுதியில் பொதுமக்கள் உதவியுடன் காரை மடக்கிப் பிடித்தனா். இந்த சம்பவத்தில் தலைமைக் காவலா் ராஜீவ் காந்திக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

குட்கா மற்றும் கா்நாடக மதுபாட்டில்களை கடத்திவந்த நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் ஒசூா் காளேகுண்டா பகுதியைச் சோ்ந்த யாரப் பாஷா (34) என தெரியவந்தது. காரில் இருந்த ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 390 கிலோ குட்கா மற்றும் 48 கா்நாடக மதுபான பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.