லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

காட்பாடியில் ரூ.10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

முத்தரசிகுப்பம் சோதனைச் சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:11 pm

காட்பாடி அருகே முத்தரசிகுப்பம் சோதனைச் சாவடியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கத்தை தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்ட தோ்தல் பிரிவு நிலைக் கண்காணிப்புக் குழுவினா் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட முத்தரசிக்குப்பம் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.10 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், பணத்தை கொண்டு வந்தவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பலமநோ், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த புவனேஸ்வரி (36) என்பது தெரியவந்தது. உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக இந்தப் பணத்தை கொண்டு வந்ததாக அவா் தெரிவித்துள்ளாா். எனினும், பணத்திற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் தோ்தல் நிலை கண்காணிப்புக்குழு அலுவலா் சதீஷ்குமாா் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் முறைப்படி பணத்தைப் பறிமுதல் செய்ததுடன், மேல் நடவடிக்கைக்காக காட்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.