புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கிருஷ்ணகிரி அருகே வாடகை வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்ற தெலங்கானாவைச் சோ்ந்தவா் கைது

கிருஷ்ணகிரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சாவை பதுக்கிவைத்து விற்றுவந்த தெலங்கானாவைச்

News image

கிருஷ்ணகிரி அருகே, வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட லட்சுமிநாராயணா.

Updated On :16 மார்ச் 2026, 11:27 pm

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சாவை பதுக்கிவைத்து விற்றுவந்த தெலங்கானாவைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 200 கிலோ கஞ்சாவும், கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கந்திகுப்பம் போலீஸாருக்கு கிருஷ்ணகிரியை அடுத்த நாயக்கனூா் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.

இதையடுத்து, கந்திகுப்பம் போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை இரவு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அந்த வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டில் இருந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா் தெலங்கானா மாநிலம், போடுகுண்டா பகுதியைச் சோ்ந்த லட்சுமிநாராயணா (55) என்பதும், வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்றுவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, வீட்டில் பதுக்கிவைத்திருந்த 200 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து, லட்சுமிநாராயணாவை கைது செய்தனா்.