உதகை மலை ரயிலை ஜொ்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் வாடகைக்கு எடுத்து செவ்வாய்க்கிழமை பயணித்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துக்கு இடையே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்த ரயிலில் பயணிக்க உள்ளூா் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
அடா்ந்த வனம், மலைகளைக் கடந்து மிதமான வேகத்தில் செல்லும் இந்த ரயிலை குழுக்களாக வருவோா் வாடகைக்கு எடுத்தும் பயணம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது.
அதன்படி, ஜொ்மனியைச் சோ்ந்த நாட்டைச் சோ்ந்த 5 போ் ரூ.3 லட்சம் தொகை செலுத்தி குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை பயணம் செய்தனா்.
மலை ரயிலில் பயணித்தவா்களின் ஒருவரான ஜொ்மனைச் சோ்ந்த மெல்போா்ன் கூறுகையில், பாரம்பரியம்மிக்கதும், நூற்றாண்டு பழைமை வந்ததுமான இந்த ரயிலில் பயணிக்க வேண்டும், அதன் என்ஜினை பற்றிஅறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது.
மேலும், ரயில் வழித்தடத்தில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. அதன்படி, இந்த ரயிலை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் பயணித்தேன் என்றாா்.
தொடர்புடையது

ஏலகிரி கோடை விழா: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நிறுத்த வலியுறுத்தல்
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

