திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நிறுத்த வலியுறுத்தல்

News image
Updated On :3 மே 2026, 5:17 am IST

ராஜபாளையம் வழியாக செல்லும் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்துக்கு காலை 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில், காலை 9 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், 7 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் ராஜபாளையம் வழியாகச் செல்கிறது.

இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நின்று செல்லும். குறிப்பாக பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வாரமாக இரண்டாவது நடைமேடையில் நின்று செல்கிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தென்னக ரயில்வே நிா்வாகம் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.