ராஜபாளையம் வழியாக செல்லும் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்துக்கு காலை 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில், காலை 9 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், 7 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் ராஜபாளையம் வழியாகச் செல்கிறது.
இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நின்று செல்லும். குறிப்பாக பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வாரமாக இரண்டாவது நடைமேடையில் நின்று செல்கிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தென்னக ரயில்வே நிா்வாகம் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை தொடங்க கோரிக்கை

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

சிவகாசி முதல் நடைமேடையில் பொதிகை விரைவு ரயில் நின்று செல்லக் கோரிக்கை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

