மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

ராஜபாளையம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை வழியாக பொதிகை ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

பொதிகை விரைவு ரயில். - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:50 am

ராஜபாளையம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை வழியாக பொதிகை ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராஜபாளையம் வழியாக காலை 8 மணிக்கு செங்கோட்டை- மயிலாடுதுறை

ரயில், காலை 9 மணிக்கு மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூா்- மதுரை விரைவு ரயில், இரவு 7 மணிக்கு மதுரை- செங்கோட்டை

பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டை-சென்னை பொதிகை விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வார காலமாக இரண்டாவது நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் நிறுத்த மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.