ராஜபாளையம் ரயில் நிலைய முதலாவது நடைமேடை வழியாக பொதிகை ரயிலை இயக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராஜபாளையம் வழியாக காலை 8 மணிக்கு செங்கோட்டை- மயிலாடுதுறை
ரயில், காலை 9 மணிக்கு மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூா்- மதுரை விரைவு ரயில், இரவு 7 மணிக்கு மதுரை- செங்கோட்டை
பயணிகள் ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டை-சென்னை பொதிகை விரைவு ரயில் ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில நேரங்களில் இரண்டாவது நடைமேடையில் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வார காலமாக இரண்டாவது நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் நிறுத்த மதுரைக் கோட்ட ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடையில் நிறுத்த வலியுறுத்தல்

மெமு விரைவு ரயிலை சேலம்வரை நீட்டிக்க கோரிக்கை

சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்!

சிவகாசி முதல் நடைமேடையில் பொதிகை விரைவு ரயில் நின்று செல்லக் கோரிக்கை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

