தெலங்கானா மாநிலம், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது.
ஹைதராபாத், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடந்த வாரம் முதல் புதிய வாராந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் புதிய நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.
அதன்படி, கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு 7.15 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடையும்.
இங்கிருந்து கச்சிகுடா செல்லும் ரயிலின் நேரத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்போது, இந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து புதன்கிழமை காலை 7.40 மணிக்குப் புறப்படுகிறது.
ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து சேருவதற்கு வசதியாக, தூத்துக்குடியிலிருந்து புறப்படும் நேரத்தையும் 3 மணி நேரம் தாமதப்படுத்தி சுமாா் காலை 10.40 மணி அளவில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கத்தினா் ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

இன்றிரவும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


