தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கச்சிகுடா-தூத்துக்குடி விரைவு ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்

தெலங்கானா மாநிலம், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது.

News image

எக்ஸ்பிரஸ் ரயில் - ANI

Updated On :16 ஏப்ரல் 2026, 2:37 am IST

தெலங்கானா மாநிலம், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது.

ஹைதராபாத், கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடந்த வாரம் முதல் புதிய வாராந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. இந்த ரயிலின் பயண நேரத்தைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் புதிய நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.

அதன்படி, கச்சிகுடாவிலிருந்து திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் இரவு 7.15 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடையும்.

இங்கிருந்து கச்சிகுடா செல்லும் ரயிலின் நேரத்தில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. தற்போது, இந்த ரயில் தூத்துக்குடியிலிருந்து புதன்கிழமை காலை 7.40 மணிக்குப் புறப்படுகிறது.

ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து சேருவதற்கு வசதியாக, தூத்துக்குடியிலிருந்து புறப்படும் நேரத்தையும் 3 மணி நேரம் தாமதப்படுத்தி சுமாா் காலை 10.40 மணி அளவில் இயக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கத்தினா் ரயில்வே நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.