யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

தில்லி அடல் உணவக நேரம் மாற்றம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

News image

ரேகா குப்தா

Updated On :12 ஏப்ரல் 2026, 12:19 am IST

தில்லியில் உள்ள அடல் உணவகங்களின் நேரத்தை மாற்றி முதல்வா் ரேகா நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.

இதன்படி தலைநகரில் உள்ள அடல் உணவகங்கள் இனி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும். இந்த நேரத்தில் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்பட்டு இரவு உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த உணவகங்களின் செயல்பாடுகள் தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய நிலையில், அவற்றின் புதிய வேலை நேர மாற்றம் சனிக்கிழமையே அமலுக்கு வந்தது.

முன்பு இந்த உணவகங்கள் காலை 11.30 மணி முதல் 2 மணி வரையிலும் மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் இயங்கி வந்தன.