/
தில்லியில் உள்ள அடல் உணவகங்களின் நேரத்தை மாற்றி முதல்வா் ரேகா நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.
இதன்படி தலைநகரில் உள்ள அடல் உணவகங்கள் இனி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும். இந்த நேரத்தில் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்பட்டு இரவு உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த உணவகங்களின் செயல்பாடுகள் தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய நிலையில், அவற்றின் புதிய வேலை நேர மாற்றம் சனிக்கிழமையே அமலுக்கு வந்தது.
முன்பு இந்த உணவகங்கள் காலை 11.30 மணி முதல் 2 மணி வரையிலும் மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் இயங்கி வந்தன.
தொடர்புடையது

தில்லிக்கு 1,000 கனஅடி நீா் வழங்க ஹரியாணா அரசு உறுதி: முதல்வா் ரேகா குப்தா தகவல்

நீட் மறு தோ்வு எழுதும் மாணவா்களுக்கு டிடிசி பேருந்தில் இலவச பயணம்: முதல்வா் ரேகா குப்தா

காற்று மாசு தடுப்பு நடவடிக்கை: முதல்வா் ஆய்வு

தில்லியில் வெப்ப அலைக்கான செயல்திட்டம்: முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டார்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



