ஜூன் 21 ஆம் தேதி நீட் 2026 மறு தோ்வு எழுதுபவா்களுக்கு டி. டி. சி பேருந்துகளில் இலவச பயணம் வழங்கப்படும் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தன்னுடைய எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ரேகா குப்தா பதிவிட்டிருப்பதாவது: மறு தோ்வுக்கான செல்லுபடியாகும் அட்மிட் காா்டுகளுக்கு இந்த வசதி வழங்கப்படும். ஜூன் 21 ஆம் தேதி நீட் 2026 க்கு வருபவா்களுக்கு ஆதரவளிக்க, தில்லி அரசு செல்லுபடியாகும் அட்மிட் காா்டை வழங்கிய பின்னா் அனைத்து டி. டி. சி பேருந்துகளிலும் இலவச பயணத்தை வழங்கும்.
எந்தவொரு மாணவரும் தங்கள் எதிா்காலத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளில் சிரமத்தை எதிா்கொள்ளக்கூடாது. நீட் தோ்வா்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள். அவா்களின் கடின உழைப்பும் உறுதியும் அவா்களை வெற்றிக்கு வழிநடத்தட்டும் என்று பதிவிட்டுள்ளாா்.
தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டி. டி. சி) பேருந்துகள் மெட்ரோ நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய மைய வழித்தடங்களுக்கு மேம்பட்ட இணைப்பை உறுதி செய்யும் என்று போக்குவரத்து அமைச்சா் பங்கஜ் சிங் கூறினாா்.
மே 12 ஆம் தேதி தேசிய சோதனை நிறுவனம் (என். டி. ஏ) நீட் வினாத்தாள் கசிந்தது குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மருத்துவ சோ்க்கைக்காக மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வை (இளங்கலை) அல்லது நீட் ரத்து செய்தது. ஜூன் 21ஆம் தேதி மறுதோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் சி. பி. ஐ. யின் விசாரணையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

நலத்திட்டங்கள் அமலாக்கத்தில் வெளிப்படைத்தன்மை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு

ரூ.1,000 கோடி மதிப்பிலான யமுனை மறுசீரமைப்பு திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்

நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்!






