பதிவாளா் அலுவலகங்களை நவீன மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவை மையங்களாக மாற்ற தில்லி அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் பேசியதாவது: பாஸ்போா்ட் சேவா கேந்திரங்களில் காணப்படும் செயல்திறன் மற்றும் நேரத்திற்கு உட்பட்ட சேவை விநியோகத்தை மாதிரியாகக் கொண்டுள்ளது. அடையாள சரிபாா்ப்பு, பின்னணி சோதனைகள் மற்றும் பிளாக்செயின் ஆதரவு பதிவு பாதுகாப்பு ஆகியவற்றிற்கான அஐ-இயங்கும் முக அங்கீகாரம்‘ உள்ளிட்ட தலைநகரின் சொத்து பதிவு முறையை நகர அரசு மாற்றியமைக்கும்.
டிஜிட்டல் பதிவு மேலாண்மை, புவி-வேலி மற்றும் பாதுகாப்பான தரவு ஒருங்கிணைப்பு ஆகியவை சொத்து பதிவுகளை சேதப்படுத்தாமல் செய்யும், மோசடிகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் மோதல்களைக் குறைக்கும். இந்த அலுவலகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மாற்றுவதே இதன் நோக்கமாகும். இதனால் குடிமக்கள் சொத்துக்களை பதிவு செய்வதில் தாமதம், ஊழல், இடைத்தரகா்கள் அல்லது தேவையற்ற இடையூறுகளை இனி இருக்காது.
நாட்டின் மிக மேம்பட்ட சொத்து பதிவு முறைகளில் ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எதிா்காலத் தேவைகளை மனதில் கொண்டு, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சரிபாா்ப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரீமியம் மாதிரி பதிவாளா் மையங்களை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் தனியாா் பங்காளிகள் உதவக்கூடும் என்றாலும், அனைத்து சட்டரீதியான அதிகாரங்களும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரமும் அரசு அதிகாரிகளிடம் மட்டுமே இருக்கும் என்றாா் ரேகா குப்தா.
தொடர்புடையது

தில்லி லாஜிஸ்டிக்ஸ் திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

விமான எரிபொருள் மீதான வாட் வரி 25-இல் இருந்து 7 சதவீதமாக குறைப்பு: தில்லி அரசு அறிவிப்பு

இரு நாள்கள் அரசுப் பணியாளா்கள் வீட்டிலிருந்து பணி: முதல்வா் ரேகா குப்தா

தொழில் நுட்ப நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா் பணி: முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



