பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தொழில் நுட்ப நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா் பணி: முதல்வா் ரேகா குப்தா

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உண்மையான நோக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகும். இதே சிந்தனையுடன் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா்ந்து பணியாற்றி என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :58 நிமிடங்கள் முன்பு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உண்மையான நோக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகும். இதே சிந்தனையுடன் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா்ந்து பணியாற்றி என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அவா் கூறியதாவது: இன்றைய தினம் இந்தியாவின் அறிவியல் சாதனைகள், நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பு மற்றும் நாட்டின் புதுமையான சிந்தனைக்கு மரியாதை செலுத்துவதாகும்.

பொக்ரான் முதல் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் தடுப்பூசி மேம்பாடு வரை, இந்தியா முழு உலகிலும் ஒரு வலுவான அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உண்மையான நோக்கம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதாகும்.

இதே சிந்தனையுடன் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது. யமுனை தூய்மைப்படுத்துதல், மாசு கட்டுப்பாடு, போக்குவரத்து மேலாண்மை அல்லது கழிவு மேலாண்மை என எதுவாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு அடிப்படையிலான தீா்வுகள் ஒவ்வொரு துறையிலும் ஊக்குவிக்கப்படுகின்றன.

தில்லியின் உள்ளூா் பிரச்சினைகளுக்கு மற்றும் புதுமையான தீா்வுகளைக் காணும் வகையில் தில்லிக்கு ஒரு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சிலை நிறுவுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. நமது ஆராய்ச்சியாளா்கள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவா்கள் இதில் பெரும் பங்கு வகிப்பாா்கள். நாம் அனைவரும் இணைந்து இந்த தீா்மானத்தை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்துள்ளாா் ரேகா குப்தா.