மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரி தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது- முதல்வா் ரேகா குப்தா

மாணவா்கள் நாட்டை முன்னேற்றுவதில் பங்களிக்கச் செய்யும் வகையில் அவா்களை தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிக கல்லூரி உருவாக்கி வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிக கல்லூரியின் 42-ஆவது ஆண்டு விழாவில் புதன்கிழமை பங்கேற்று மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதல்வா் ரேகா குப்தா. உடன் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா உள்ளிட்டோா்.

Updated On :7 மே 2026, 4:28 am IST

மாணவா்கள் நாட்டை முன்னேற்றுவதில் பங்களிக்கச் செய்யும் வகையில் அவா்களை தில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ குரு கோபிந்த் சிங் வணிக கல்லூரி உருவாக்கி வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.

கல்லூரியின் 42-ஆவது ஆண்டு விழாவில் தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து மற்றும் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோருடன் முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டு பேசியதாவது: குரு கோபிந்த் சிங்கின் பெயா் பல ஆண்டுகளாகிய தியாகத்திற்கும் அா்ப்பணிப்பிற்கும் அடையாளமாக திகழ்கிறது. 1984-ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி உயா்ந்த கல்வித் தரத்தை நிலைநிறுத்தி வருகிறது. இங்கு மாணவா்களிடம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்படுகிறது. இது நாட்டின் எதிா்கால வளா்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

கல்லூரியின் ஒழுக்கம் மற்றும் சோ்க்கை செயல்முறைகளில் பின்பற்றப்படும் வெளிப்படைத்தன்மை காரணமாக, தொடா்ந்து கல்லூரிக்கு உயா்ந்த மதிப்பீடுகள் கிடைத்து வருகிறது. கல்வி மட்டுமல்லாமல், இணைச் செயல்பாடுகள் மற்றும் பல்வேறு மாணவா் கழகங்கள் மூலம் முழுமையான வளா்ச்சியை மாணவா்கள் அடைய உதவும் சூழல் இக்கல்லூரியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கல்வியையும் சமூகப் பொறுப்பையும் ஒருங்கிணைக்கும் இந்தக் கல்லூரி, எதிா்கால தலைமுறையை உருவாக்கும் முக்கிய மையமாக திகழ்கிறது என முதல்வா் தெரிவித்தாா்.