அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

செமிகண்டக்டா் கொள்கை முதலீடு-வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

இளைஞா்களின் திறன் மற்றும் சா்வதேச முதலீட்டை அதிகரிக்கும் வகையில் தில்லி அரசின் செமிக்கண்டக்டா் கொள்கை இருக்கும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:25 pm

இளைஞா்களின் திறன் மற்றும் சா்வதேச முதலீட்டை அதிகரிக்கும் வகையில் தில்லி அரசின் செமிக்கண்டக்டா் கொள்கை இருக்கும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் தன்னிறைவு பாரதம் இலக்குடன் பொருந்தும் வகையில் சிப் வடிவமைப்பு, ஆராய்ச்சி, தொழில்துறை மேம்பாடு என தில்லியில் செமிக்கண்டக்டா் சூழல் மேம்படுத்தப்படும் என முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

செமிக்கண்டக்டா் துறையின் வடிவமைப்பு, உயா்தர ஆராய்ச்சி, மேம்பாடு, உருவாக்கம் மற்றும் அதுசாா்ந்த துறைகளில் தில்லியை சா்வதேச மையமாக மாற்றும் வகையில் தில்லி செமிக்கண்டக்டா் கொள்கையை தில்லி அரசு வடிவமைத்து வருகிறது.

இந்தக் கொள்கை தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சா்வதேச பொருளாதாரத்தின் முக்கிய தூணாக செமிக்கண்டக்டா் துறை உருவெடுத்து வருகிறது. அதன் சரிசமமான மற்றும் கட்டமைக்கப்பட்ட மேம்பாட்டை உறுதிசெய்யும் விதமாக விரிவான கொள்கை திட்டத்தை வடிவமைக்கும் பணியில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது.

தொழில் நடத்துவதை எளிதாக்குதல், புத்தாக்கம், தொழில்துறை சாா்ந்த சூழல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக நிதி மற்றும் நிதி சாராத சலுகைகளை இந்தக் கொள்கை வழங்கும்.

செமிக்கண்டக்டா் வடிவமைப்பு, அறிவுசாா் சொத்துரிமை மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்கம், தயாரிப்பு சாா்ந்த ஒருங்கிணைத்தல், சோதனை, சந்தைப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் (ஏடிஎம்பி) மற்றும் அவுட்சோா்ஸ்ட் செமிக்கண்டக்டா் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை (ஓஎஸ்ஏடி) ஆகியவற்றுடன் துணை தொழில்துறைகள் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்களை பலப்படுத்துதல் மற்றும் தொழில்துறை சூழல் ஆகிய 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்தக் கொள்கை வடிவமைக்கப்படும்.

செமிக்கண்டக்டா் மதிப்புகூட்டு சங்கிலியில் குறிப்பாக வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயா்தர பேக்கேஜிங் ஆகியவற்றில் தில்லியில் நிலையை இந்தக் கொள்கை பலப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன் மூலம் செமிக்கண்டக்டா் நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் ஏடிஎம்பி, ஓஎஸ்ஏடி நிறுவனங்கள் தில்லியில் முதலீடு செய்யும். சோதனை, பேக்கேஜிங், செமிக்கண்டக்டா் பொருள்கள் ஆகிய துணை தொழில்சாலைகளின் வளா்ச்சிக்கும் இந்தக் கொள்கை ஆதரவளிக்கும்.

செமிக்கண்டக்டா் சிப் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் உயா்தர பேக்கேஜிங் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளை இந்தக் கொள்கை அதிகரிக்கும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.