இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள இரண்டு சா்வதேச உச்சிமாநாடுகளையும் சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யுமாறு தில்லி முதல்வா் ரேகா குப்தா அதிகாரிகளுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
மே 28 முதல் ஜூன் 1 வரை ஏற்பாடு செய்யப்படவுள்ள நான்காவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சி மற்றும் முதலாவது சா்வதேச புலிகள் உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து தில்லி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு குப்தா தலைமை தாங்கினாா்.
இது குறித்து ரேகா குப்தா பேசியதாவது: ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்துடன் இணைந்து மே 31 ஆம் தேதி 4 ஆவது இந்தியா-ஆப்பிரிக்கா மன்ற உச்சிமாநாட்டை தேசிய தலைநகரம் நடத்தவுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் மிக உயா்ந்த மட்டத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, நோடல் அதிகாரிகள் மற்றும் நிகழ்நேர கண்காணிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சந்தைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் தூய்மை மற்றும் பொது வசதிகளை சிறப்பாக நிா்வகிப்பதை உறுதி செய்வதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி ஃபரீதாபாத் புதிய மெமு ரயில் சேவைக்கு ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி முதல்வா் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மனு: திகாா் சிறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பொது மக்களின் புகாா்கள் மீது துரித நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வா் ரேகா குப்தா உத்தரவு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

