ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்

தேசிய தலைநகரில் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்

News image

ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:21 am IST

தேசிய தலைநகரில் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்களன்று தெரிவித்தாா்

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் பதிவிட்டதாவது: ‘ஆசாத் பூா் மண்டி, குப்தா மாா்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டேன்.

இங்கு, தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளிடமிருந்து முன்னேற்ற அறிக்கைகளைப் பெற்றேன். உள்ளூா் மக்களின் போக்குவரத்து மற்றும் பிற வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்துப் பணிகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், தரத்தில் எந்த சமரசமும் இன்றி முடிக்கப்படுவதை உறுதிசெய்ய தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பொதுமக்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் உரிய நேரத்தில் பெற முடியும்.

சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பாா்வையிட்ட பிறகு, தூய்மை, குப்பை சேகரிப்பு மற்றும் சிறந்த மேலாண்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினேன்.

தில்லி மக்களின் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டங்கள் உரிய நேரத்தில் முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கப்படுவதை உறுதிசெய்ய, எங்கள் அரசு 24 மணி நேரமும் அயராது உழைத்து வருகிறது‘, என தில்லி முதல்வா் ரேகா குப்தா எக்ஸ் பதிவில் தெரிவித்தாா்

முன்னதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்களன்று வடக்கு தில்லியின் ஆசாத்பூா் அருகே உள்ள பகுதிகளை ஆய்வு செய்து, திறந்த சாக்கடைகள் மற்றும் சுகாதாரமின்மையைக் கண்டறிந்து அதிகாரிகளைக் கண்டித்தாா். இந்த ஆய்வின்போது, குப்தாவுடன் தில்லி மெட்ரோ, பொதுப்பணித் துறை மற்றும் தில்லி மாநகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனா்.