திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருவள்ளூர் யார்டு பகுதியில் ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு 23:30 மணி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி காலை 06:30 மணி வரை பராமரிப்புப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, மெமு/புறநகர் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 10.55 மணிக்கு அரக்கோணம் நோக்கிப் புறப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மூர் மார்க்கெட்டில் இருந்து சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு திருவள்ளூர் நோக்கிப் புறப்படும் புறநகர் ரயில், திருநின்றவூர் மற்றும் திருவள்ளூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் திருவள்ளூர் ரயில், திருநின்றவூர் - திருவள்ளூர் இடையேயும், திருவள்ளூரில் இருந்து காலை 3.50 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் ரயில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.
இவைதவிர திருவள்ளூரில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் பொன்னேரி ரயில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையேயும், திருவள்ளூரில் இருந்து காலை 5.55 மணிக்கு புறப்படும் மூர் மார்க்கெட் ரயில், திருவள்ளூர் - திருநின்றவூர் இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Suburban train services have been changed today and tomorrow due to maintenance work at Tiruvallur railway station.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











