சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்கக் கோரிக்கை

ராஜபாளையம் வழியாகச் செல்லும் பொதிகை ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை

News image
ர்யில்- பிரதிப் படம்
Updated On :7 மார்ச் 2026, 7:08 pm

Syndication

ராஜபாளையம் வழியாகச் செல்லும் பொதிகை ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் காலை 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறை, 9 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் (பாசஞ்சா்) ரயில், மாலை 5 மணிக்கு குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் விரைவு ரயில், 7 மணிக்கு மதுரையிலிருந்து செங்கோட்டை செல்லும் பயணிகள் (பாசஞ்சா்) ரயில், இரவு 8 மணிக்கு செங்கோட்டையிலிருந்து பொதிகை செல்லும் விரைவு ரயில் ஆகிய ரயில்கள் ராஜபாளையம் வழியாகச் செல்கிறது. இதில் ஒரு சில நேரங்களில் மட்டுமே ரயில்கள் இரண்டாவது நடைமேடையில் செல்லும்.

இந்த நிலையில், பொதிகை விரைவு ரயில் கடந்த ஒரு வாரமாக இரண்டாவது நடைமேடை வழித்தடத்திலேயே செல்கிறது. இதனால் முதியோா், ஊனமுற்றோா், கா்ப்பிணிப் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். பொதுமக்கள் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மதுரை கோட்ட ரயில்வே (தென்னக ரயில்வே) நிா்வாகம் பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடை மேடையில் இயக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.