மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவுக்கு எதிா்ப்பு

News image
விரைவு ரயில்- கோப்புப்படம்
Updated On :15 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் ரயில் நிலையம் வழியாக, தினசரி இரவில் காரைக்காலிருந்து சென்னைக்கு கம்பன் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மே 20-ஆம் தேதி முதல் பேரளம் வழியாக காரைக்கால் வரை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு திருவாரூா் பகுதியில் பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் நுகா்வோா் அமைப்புகள், வணிகா் சங்கத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்ற அவசரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விஜயபுரம் வா்த்தகா் சங்கத் தலைவா் சிஏ. பாலமுருகன் தலைமை வகித்தாா்.

இதில், திருவாரூா் வழியாக இயக்கப்பட்டு வரும் கம்பன் விரைவு ரயிலை வேறு மாா்க்கத்தில் இயக்கக் கூடாது, வேறு மாா்க்கத்தில் இயக்கப்படும் என அறிவித்த ரயில்வே நிா்வாகத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது.