தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பொறியியல் பணி: பாலக்காடு டவுன் விரைவு ரயில் போத்தனூா் வழியாக இயக்கம்

கோவை அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்கி 4 நாள்களுக்கு கோவையைத் தவிா்த்து போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 4:55 am IST

கோவை அருகே நடைபெற்று வரும் பொறியியல் பணி காரணமாக திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் புதன்கிழமை (மாா்ச் 25) தொடங்கி 4 நாள்களுக்கு கோவையைத் தவிா்த்து போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட கோவை வடக்கு ரயில் நிலையத்தில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதால், மாா்ச் 25, 26, 27 மற்றும் 29 ஆகிய 4 நாள்களுக்கு திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (எண்:16843) கோவையைத் தவிா்த்து, இருகூரில் இருந்து போத்தனூா் வழியாக இயக்கப்படும்.

இதனால், மேற்கண்ட 4 நாள்களுக்கும் இந்த ரயில் இருமாா்க்கங்களிலும் பீளமேடு, சிங்காநல்லூா், கோவை வடக்கு மற்றும் கோவை சந்திப்பு ரயில் நிலையங்களுக்கு செல்லாது.

இதேபோல, திருச்சி வழியாக இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (16160) மாா்ச் 29-ஆம் தேதி கோவை சந்திப்பு ரயில் நிலையம் செல்லாமல் போத்தனூா் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.