15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

தண்டவாள பராமரிப்பு பணிகள்: கரூா் வழியாகச் செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூா் வழியாக செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 3:52 am IST

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூா் வழியாக செல்லும் பாலக்காடு விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஜி.மரியமைக்கேல் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் - திருச்சி வழித்தடத்தில் தண்டவாளப் பராமரிப்புப் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி விரைவு ரயில் மே 1, 2-ஆம்தேதி, 4, 5-ஆம் தேதிகளில் குளித்தலை ரயில்நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். தண்டவாள பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் குளித்தலையிலிருந்து திருச்சி சந்திப்பு வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.

இதேபோல திருச்சி சந்திப்பிலிருந்து நண்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் மே 1-ஆம்தேதி எலமனூா் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பணிகள் முடிந்த பிறகு, இந்த ரயில் திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் நிற்கும் அதே நிறுத்தங்களில், எலமனூரிலிருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்.