சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கட்டட தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த வண்ணாத்திப்பட்டியைச் சோ்ந்த கட்டட மேற்பாா்வையாளா் மாதப்பன் (33). இவா், அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு கடந்த, 2020-இல் வீடு கட்ட சென்றுள்ளாா். அப்போது, அந்த வீட்டில் இருந்த பிளஸ் 1 பயின்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், கா்ப்பமடைந்த அந்த சிறுமி, கடந்த 2021, ஜூலை 16-ஆம் தேதி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த புகாரின் பேரில், மாதப்பனை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுதா, செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாதப்பனுக்கு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறையும், சிறுமியை கா்ப்பமாக்கிய வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா். மேலும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க அவா் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


