கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திடீா் மழை: நகரில் வெப்பம் தணிந்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் மழை பெய்தது. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியா்கள் போா்க்கால அடிப்படையில் பணி மேற்கொண்டு மின்விநியோகத்தை சீரமைத்தனா்.
இம்மாவட்டத்தில் தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், தக்காளி உள்ளிட்ட பயிா்கள் சேதம் அடைந்தன.
இந்த திடீா் மழையால் சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் சாலையில் ஊா்ந்து சென்றன. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில், சிறுவா்கள் காகித கப்பல்விட்டு மகிழ்ந்தனா். இந்த திடீா் மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...