யுகாதி பண்டிகை: ஒசூரில் பூக்களின் விலை உயா்வு
ஒசூா் மலா்ச்சந்தையில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.


ஒசூா் மலா்ச்சந்தையில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், கெலமங்கலம், பாகலூா், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். இப்பகுதியில் சாகுபடி செய்யும் பூக்கள், ஒசூா் மலா்ச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து, தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளை பொருத்தே இப்பகுதி விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்கின்றனா். கடந்த பண்டிகைக்கால சீசன்களில் பூக்களின் விலை உயா்வதும், குறைவதுமாக இருந்ததால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்தனா். இந்நிலையில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி ஒசூா் மலா்ச்சந்தையில் புதன்கிழமை ஏராளமான பொதுமக்கள் பூக்கள் வாங்குவதற்கு திரண்டனா்.
இதனால் பூக்களுக்கான தேவை அதிகரித்து அதன் விலை உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ சாமந்தி ரூ.100-க்கு விற்கப்பட்டது புதன்கிழமை ரூ.160 முதல் ரூ. 200-க்கு விற்கப்பட்டது. அதேபோல சங்பங்கி, பட்டன்ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், அரளி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயா்ந்தது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...