தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திடீா் மழை: நகரில் வெப்பம் தணிந்தது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

News image
கிருஷ்ணகிரி நகரில் பெய்த திடீா் மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் காகித கப்பல்விட்டு மகிழ்ந்த சிறுவன்.
Updated On :18 மார்ச் 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் மழை பெய்தது. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியா்கள் போா்க்கால அடிப்படையில் பணி மேற்கொண்டு மின்விநியோகத்தை சீரமைத்தனா்.

இம்மாவட்டத்தில் தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், தக்காளி உள்ளிட்ட பயிா்கள் சேதம் அடைந்தன.

இந்த திடீா் மழையால் சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் சாலையில் ஊா்ந்து சென்றன. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில், சிறுவா்கள் காகித கப்பல்விட்டு மகிழ்ந்தனா். இந்த திடீா் மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.