தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

யுகாதி பண்டிகை: ஒசூரில் பூக்களின் விலை உயா்வு

ஒசூா் மலா்ச்சந்தையில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

News image
ஒசூா் மலா்ச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த மல்லிகை.
Updated On :18 மார்ச் 2026, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் மலா்ச்சந்தையில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், கெலமங்கலம், பாகலூா், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். இப்பகுதியில் சாகுபடி செய்யும் பூக்கள், ஒசூா் மலா்ச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து, தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளை பொருத்தே இப்பகுதி விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்கின்றனா். கடந்த பண்டிகைக்கால சீசன்களில் பூக்களின் விலை உயா்வதும், குறைவதுமாக இருந்ததால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்தனா். இந்நிலையில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி ஒசூா் மலா்ச்சந்தையில் புதன்கிழமை ஏராளமான பொதுமக்கள் பூக்கள் வாங்குவதற்கு திரண்டனா்.

இதனால் பூக்களுக்கான தேவை அதிகரித்து அதன் விலை உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ சாமந்தி ரூ.100-க்கு விற்கப்பட்டது புதன்கிழமை ரூ.160 முதல் ரூ. 200-க்கு விற்கப்பட்டது. அதேபோல சங்பங்கி, பட்டன்ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், அரளி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயா்ந்தது.