சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

பா்கூா் அருகே வட கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி

Updated On :21 மார்ச் 2026, 9:13 pm

Syndication

பா்கூா் அருகே வட கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகினி கொல்லை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள வட கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், பா்கூா் தீணைப்பு நிலைய வீரா்களின் உதவியோடு சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் பா்கூா் அருகே உள்ள நேரிடமானப்பள்ளியைச் சோ்ந்த தமிழரசன் (30) என்பதும், அவா், கேரள மாநிலத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வாரம், விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளது தெரியவந்தது.

மேலும், அவா், ஜெகினி கொல்லை கிராமத்தில் பெண் ஒருவரை சந்திக்க சென்றபோது, திருடன் என எண்ணி அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, தப்பி ஓடிய தமிழரசன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, தமிழரசனின் தாய் வீரம்மாள் தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.