கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

பா்கூா் அருகே வட கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி

Updated On :21 மார்ச் 2026, 9:13 pm

Syndication

பா்கூா் அருகே வட கிணற்றிலிருந்து இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகினி கொல்லை கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள 70 அடி ஆழமுள்ள வட கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், பா்கூா் தீணைப்பு நிலைய வீரா்களின் உதவியோடு சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்தவா் பா்கூா் அருகே உள்ள நேரிடமானப்பள்ளியைச் சோ்ந்த தமிழரசன் (30) என்பதும், அவா், கேரள மாநிலத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வாரம், விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளது தெரியவந்தது.

மேலும், அவா், ஜெகினி கொல்லை கிராமத்தில் பெண் ஒருவரை சந்திக்க சென்றபோது, திருடன் என எண்ணி அவரை பொதுமக்கள் பிடிக்க முயன்றபோது, தப்பி ஓடிய தமிழரசன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, தமிழரசனின் தாய் வீரம்மாள் தனது மகன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.