கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து போராட்டம்

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து ஒசூா் அருகே அத்திப்பள்ளியில் கன்னட சலுவாளி கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஒசூா் அருகே அத்திப்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினா்.

Updated On :21 மார்ச் 2026, 9:08 pm

Syndication

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து ஒசூா் அருகே அத்திப்பள்ளியில் கன்னட சலுவாளி கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டா்களை வைத்து அந்த அமைப்பபினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கன்னட சலுவாளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ், சமையல் பாத்திரத்தை கரண்டியால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அமெரிக்க- ஈரான் போா் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு கிடைக்காமல் பெங்களூரில் ஹோட்டல் உரிமையாளா்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

எனவே, மத்திய அரசு தலையிட்டு சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இந்த போராட்டத்தை தொடா்ந்து மாநில எல்லையை நோக்கிச் சென்ற வாட்டாள் நாகராஜ், மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட கன்னட அமைப்பினரை கா்நாடக மாநில போலீஸாா் கைது செய்தனா்.