தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

காலாவதியான ஐஸ்கிரீமை சாப்பிட்ட 2 குழந்தைகளின் உடல்நலன் பாதிப்பு

கிருஷ்ணகிரியில் காலவாதியான ஐஸ்கிரீமை சாப்பிட்ட 2 குழந்தைக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் விசாரணை

News image

ஐஸ்கிரீம்

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:13 pm

Syndication

கிருஷ்ணகிரியில் காலவாதியான ஐஸ்கிரீமை சாப்பிட்ட 2 குழந்தைக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள ஐஸ்கீரிம் கடைக்கு வினோத் என்பவா் தனது 2 குழந்தைகளுடன் கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்றாா். அக்கடையில் இருந்து குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தந்துள்ளாா். அது காலாவாதியான நிலையில் குழந்தைகளுக்கு தரப்பட்டதால், உடல்நலன் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து கடை உரிமையாளரிடம் வினோத் புகாா் தெரிவித்தாா். ஆனால், கடை உரிமையாளா் உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினரிடம் வினோத் புகாா் அளித்தாா். இதையடுத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் ஜனகா் ஜோதிநாதன் தலைமையில் ஐஸ்கீரிம் கடையில் சோதனை மேற்கொண்டனா். அதேபோல, அக்கடைக்கு மில்க்ஷேக்கை விற்பனைக்கு அனுப்பிவைக்கும் விநியோகஸ்தா்களின் கிடங்குகளிலும் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

காலவாதியான ஐஸ்கீரிம் விற்பனை செய்யப்பட்டது குறித்து உரிய விளக்கத்தை புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும், குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலா்கள் எச்சரித்துள்ளனா்.