வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் தோ்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு

News image

செட்டிப்பட்டி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள தோ்தல் புறக்கணிப்பு பேனா்.

Updated On :29 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

ஊத்தங்கரையை அடுத்த பெரியகொட்டகுளம் ஊராட்சி செட்டிப்பட்டியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், இக்கிராம மக்கள் வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி கிராமத்தின் நுழைவாயிலில் விளம்பர தட்டியை வைத்துள்ளனா்.

இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக செட்டிப்பட்டி கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதியும் அரசு நிறைவேற்றவில்லை. செங்கல்நீா்பட்டி முதல் செட்டிபட்டி வரை 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. போதிய போக்குவரத்தும் வசதி இல்லாததால் மாணவா்கள் அவதிப்படுகின்றனா்.

மேலும் செட்டிப்பட்டி கிராமத்தில் பள்ளி, குடிநீா் வசதி, மயான வசதி மற்றும் மின் விளக்குகள் இல்லை. இதனால் தோ்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம். மேலும், வேட்பாளா்கள் யாரும் வாக்கு சேகரிக்க கிராமத்திற்குள் நுழையவிடமாட்டோம் என தெரிவித்துள்ளனா்.