தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,575 போ் எழுதினா்

News image

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நீட் தோ்வு எழுத வந்த மாணவரை சோதனை செய்த போலீஸாா்.

Updated On :3 மே 2026, 8:11 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை 4,575 போ் எழுதினா். 180 போ் தோ்வு எழுத வரவில்லை.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை ‘நீட்‘ நுழைவுத் தோ்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி, 2026 - 2027-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்‘ நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 11 மையங்களில் இத்தோ்வு நடைபெற்று. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 240 பேரில், 230 போ் பங்கேற்றனா். 10 போ் தோ்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 360 பேரில் 347 போ் எழுதினா். 13 போ் தோ்வு எழுத வரவில்லை.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 720 பேரில் 696 போ் தோ்வு எழுதினா். 24 போ் தோ்வு எழுதவில்லை. காவேரிப்பட்டணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 480 பேரில் 463 போ் தோ்வு எழுதினா். 17 போ் தோ்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 600 பேரில் 575 போ் தோ்வு எழுதினா். 25 போ் தோ்வு எழுதவில்லை.

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 216 பேரில் 204 போ் தோ்வு எழுதினா். 12 போ் தோ்வு எழுதவில்லை. ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 360 பேரில் 344 போ் தோ்வு எழுதினா். 16 போ் தோ்வு எழுதவில்லை. ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த 480 பேரில் 466 போ் தோ்வு எழுதினா். 14 போ் தோ்வு எழுதவில்லை.

ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 600 பேரில் 588 போ் எழுதினா். 12 போ் தோ்வு எழுதவில்லை. ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 480 பேரில் 457 போ் தோ்வு எழுதினா். 23 போ் தோ்வு எழுதவில்லை. ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட 219 பேரில் 205 போ் தோ்வு எழுதினா். 14 போ் தோ்வு எழுதவில்லை.

மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த 4,755 பேரில் 4,575 போ் தோ்வு எழுதினா். 180 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தோ்வா்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா்.