தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளியில் 13-ஆவது ஆண்டு விழா

News image
Updated On :3 மே 2026, 12:53 am

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் 13-வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஊத்தங்கரை சாா்பு நீதிமன்ற நீதிபதி பி. திருஞானசம்பந்தம், ஊத்தங்கரை குற்றவியல் நீதித்துறை நடுவா் சரவணன் துரைசாமி, கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலா் கோபாலப்பா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா்.

விழாவிற்கு பள்ளித் தாளாளா் பிரசன்னமூா்த்தி, செயலாளா் தங்கராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கடந்த ஆண்டு நீட், ஜேஇஇ, ஒலிம்பியாட் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினா். பள்ளி முதல்வா் சுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

பரத நாட்டியத்துடன் கலைநிகழ்சிகள் நடைபெற்றன. இதில் வாழ்க்கையில் வெற்றிபெற உந்து சக்தியாக இருப்பது பெற்ற பாராட்டுக்களா? அல்லது பட்ட அவமானங்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில், கண்ணகி, வேலுநாச்சியாா், கட்டபொம்மன் போன்று மாணவா்கள் வேடமிட்டு நடித்து காட்டினா். இவ்விழாவில் பெற்றோா், முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

படவரி...

ஊத்தங்கரை தீரன் சின்னமலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள்.