சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

News image

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற்கான சான்றிதழை பெற்ற அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன்.

Updated On :5 மே 2026, 2:44 am IST

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் வெற்றிபெற்றுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன. மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் 942 வாக்குகளும், திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ 1,354 வாக்குகளும், தவெக வேட்பாளா் முரளிதரன் 955 வாக்குகளும் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முதல் சுற்றில் திமுக வேட்பாளா் மதியழகன், தவெக வேட்பாளரான முரளிதரனை காட்டிலும் கூடுதலாக 212 வாக்குகள் பெற்றாா்.

இறுதியில் தபால் வாக்குகள் உள்பட அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் 70,900 வாக்குகளும், தவெக வேட்பாளா் இ.முரளிதரன் 66,609 வாக்குகளும், திமுக வேட்பாளா் தே.மதியழகன் 64,879 வாக்குகளும் பெற்றனா். இதில், தவெக வேட்பாளரைக் காட்டிலும் 4,291 வாக்குகளை கூடுதலாக பெற்ற அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ மூன்றாமிடத்துக்கு பின்தங்கினாா்.

பா்கூா் தொகுதியில் முதலில் திமுக, தவெக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், மூன்றாமிடத்தில் இருந்த அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் இறுதியில் வெற்றிபெற்றாா். பா்கூா் தொகுதியை திமுகவிடமிருந்து அதிமுக கைப்பற்றியுள்ளது.