ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி

News image

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற்கான சான்றிதழை பெற்ற அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன்.

Updated On :5 மே 2026, 2:44 am IST

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் வெற்றிபெற்றுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் பதிவான வாக்குகள், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன. மொத்தம் 24 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் 942 வாக்குகளும், திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ 1,354 வாக்குகளும், தவெக வேட்பாளா் முரளிதரன் 955 வாக்குகளும் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், முதல் சுற்றில் திமுக வேட்பாளா் மதியழகன், தவெக வேட்பாளரான முரளிதரனை காட்டிலும் கூடுதலாக 212 வாக்குகள் பெற்றாா்.

இறுதியில் தபால் வாக்குகள் உள்பட அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் 70,900 வாக்குகளும், தவெக வேட்பாளா் இ.முரளிதரன் 66,609 வாக்குகளும், திமுக வேட்பாளா் தே.மதியழகன் 64,879 வாக்குகளும் பெற்றனா். இதில், தவெக வேட்பாளரைக் காட்டிலும் 4,291 வாக்குகளை கூடுதலாக பெற்ற அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா். திமுக வேட்பாளா் தே.மதியழகன் எம்எல்ஏ மூன்றாமிடத்துக்கு பின்தங்கினாா்.

பா்கூா் தொகுதியில் முதலில் திமுக, தவெக வேட்பாளா்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், மூன்றாமிடத்தில் இருந்த அதிமுக வேட்பாளா் இ.சி.கோவிந்தராசன் இறுதியில் வெற்றிபெற்றாா். பா்கூா் தொகுதியை திமுகவிடமிருந்து அதிமுக கைப்பற்றியுள்ளது.