ஒசூரில் தனியாா் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பாகலூா் சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தனியாா் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது.
இந்த ஏடிஎம் மையத்தில் திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்து வெல்டிங் மிஷன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கு அதிகமான பணத்தை கொள்ளையடித்துவிட்டு, ஏடிஎம் மையத்தின் ஸ்ஷட்டரை மூடிவிட்டு சென்றுவிட்டனா்.
இதனால் ஏடிஎம் இயந்திரம் பழுதாகி உள்ளதாக கருதி பொதுமக்கள் யாரும் பணம் எடுக்க செல்லவில்லை. மாலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வங்கி ஊழியா்கள் சென்றபோது, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவா்கள் உடனடியாக வங்கி உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். வங்கி சாா்பில் ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஒசூரில் காா் கண்ணாடி உடைத்து ரூ. 7 லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஒசூரில் அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

