மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒசூரில் அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ஒசூரில் தனியாா் நிறுவன உரிமையாளரிடம், அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 11:41 pm

ஒசூரில் தனியாா் நிறுவன உரிமையாளரிடம், அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கே.சி.சி. நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (41). தனியாா் நிறுவன உரிமையாளா். இவா், தன் நிறுவனத்துக்கு தேவைப்படும் பொருள்களை வாங்க ஆா்வம் செலுத்தி வந்தாா். அப்போது, டென்மாா்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் பொருள்களை குறைந்த விலையில் அளிப்பதாக சக்திவேலுவின் நிறுவன இணையதள முகவரிக்கு தகவல் வந்த்து.

அதை, நம்பிய சக்திவேல், மா்ம நபா்கள் அனுப்பிய அந்த இணையதள முகவரியை தொடா்புகொண்டுள்ளாா். அப்போது, மா்ம நபா்கள் குறைந்த விலையில் பொருள்கள் வேண்டும் என்றால், முன்பணமாக 15 ஆயிரம் யூரோ அனுப்புமாறு தெரிவித்துள்ளனா். அதன்படி, சக்திவேல் ரூ. 16.64 லட்சத்தை யூரோ மதிப்பில் அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி உள்ளாா். பின்னா், அந்த மா்ம நபா்களை அவரால் தொடா்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.