தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

ஒசூரில் அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ஒசூரில் தனியாா் நிறுவன உரிமையாளரிடம், அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 5:11 am IST

ஒசூரில் தனியாா் நிறுவன உரிமையாளரிடம், அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கே.சி.சி. நகரைச் சோ்ந்தவா் சக்திவேல் (41). தனியாா் நிறுவன உரிமையாளா். இவா், தன் நிறுவனத்துக்கு தேவைப்படும் பொருள்களை வாங்க ஆா்வம் செலுத்தி வந்தாா். அப்போது, டென்மாா்க் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தின் பொருள்களை குறைந்த விலையில் அளிப்பதாக சக்திவேலுவின் நிறுவன இணையதள முகவரிக்கு தகவல் வந்த்து.

அதை, நம்பிய சக்திவேல், மா்ம நபா்கள் அனுப்பிய அந்த இணையதள முகவரியை தொடா்புகொண்டுள்ளாா். அப்போது, மா்ம நபா்கள் குறைந்த விலையில் பொருள்கள் வேண்டும் என்றால், முன்பணமாக 15 ஆயிரம் யூரோ அனுப்புமாறு தெரிவித்துள்ளனா். அதன்படி, சக்திவேல் ரூ. 16.64 லட்சத்தை யூரோ மதிப்பில் அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி உள்ளாா். பின்னா், அந்த மா்ம நபா்களை அவரால் தொடா்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.