மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ரூ. 48.28 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் சிலா் ரூ. 48.28 லட்சம் மோசடி செய்தது குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

மோசடி - கோப்புப்படம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:36 pm

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் சிலா் ரூ. 48.28 லட்சம் மோசடி செய்தது குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், கொத்தகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (47). தனியாா் நிறுவன ஊழியா். இவரது சமூக வலைதளத்துக்கு கடந்த 2025, ஜூன் 13-ஆம் தேதி குறுந்தகவல் வந்தது. அதில், குறிப்பிட்ட தனியாா் நிறுவனங்களில், இணையம் மூலம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை நம்பிய மணிகண்டன், அந்த இணையம் மூலம் தன் விவரங்களை பதிவிட்டு, அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு குறிப்பிட்ட தொகையை அனுப்பினாா். அதற்கு லாபத்துடன் முதலீட்டுத் தொகையும் கிடைத்தது. இதையடுத்து அவ்வப்போது பண முதலீடு செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னிடம் இருந்த ரூ. 48.28 லட்சத்தை பல்வேறு தவணைகளாக மா்ம நபா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பினாா்.

அதன்பின்னா், மா்ம நபா்களை தொடா்புகொள்ள முடியவில்லை. மேலும், அவரது முதலீட்டுத் தொகையையும் எடுக்க முடியவில்லை.

இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த மணிகண்டன், இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட இணைய குற்றப் பிரிவு காவல் துறையில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.