தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

இணைய வழியில் இருவரிடம் ரூ.31 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி இருவரிடம் ரூ. 31 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

(கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 12:53 am IST

கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி இருவரிடம் ரூ. 31 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்பாஸ் மந்திரி (39). இவா் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முகநூலில் வெளியான முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பாா்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டாா். பிறகு அவா்கள் கூறிய வங்கிக்கணக்கில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரையான காலகட்டத்தில் 22 தவணைகளாக ரூ. 20 லட்சத்து 62 ஆயிரத்து 687-ஐ செலுத்தினாா். இதன் பிறகு அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

மற்றொரு வழக்கு... சிவகங்கையை அருகே ஒக்கூா் பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண் ஒருவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முகநூலில் பதிவிடப்பட்டிருந்த விளம்பரத்தை பாா்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். அப்போது அதில் பேசியவா்கள் தாங்கள் கூறும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனத் தெரிவித்தனா்.

இதை நம்பிய அந்தப் பெண், அவா்கள் கூறிய வங்கிக் கணக்கு களில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் 33 தவணைகளில் ரூ. 10 லட்சத்து 89 ஆயிரத்து 481-ஐ செலுத்தினாா். அதன் பிறகு அவா்கள் எந்தத் தொடா்பும் கொள்ளவில்லையாம். இதைத் தொடா்ந்து அவா் அளித்த புகாரின் பேரில் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.