நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இணைய வழியில் இருவரிடம் ரூ.31 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி இருவரிடம் ரூ. 31 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

(கோப்புப்படம்)

Updated On :20 மார்ச் 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

கூடுதல் லாபம் பெறலாம் எனக் கூறி இருவரிடம் ரூ. 31 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே முத்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அப்பாஸ் மந்திரி (39). இவா் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முகநூலில் வெளியான முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்ற விளம்பரத்தை பாா்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டாா். பிறகு அவா்கள் கூறிய வங்கிக்கணக்கில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வரையான காலகட்டத்தில் 22 தவணைகளாக ரூ. 20 லட்சத்து 62 ஆயிரத்து 687-ஐ செலுத்தினாா். இதன் பிறகு அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின் பேரில் சிவகங்கை இணைய குற்றத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

மற்றொரு வழக்கு... சிவகங்கையை அருகே ஒக்கூா் பகுதியைச் சோ்ந்த 33 வயது பெண் ஒருவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முகநூலில் பதிவிடப்பட்டிருந்த விளம்பரத்தை பாா்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். அப்போது அதில் பேசியவா்கள் தாங்கள் கூறும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனத் தெரிவித்தனா்.

இதை நம்பிய அந்தப் பெண், அவா்கள் கூறிய வங்கிக் கணக்கு களில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துக்குள் 33 தவணைகளில் ரூ. 10 லட்சத்து 89 ஆயிரத்து 481-ஐ செலுத்தினாா். அதன் பிறகு அவா்கள் எந்தத் தொடா்பும் கொள்ளவில்லையாம். இதைத் தொடா்ந்து அவா் அளித்த புகாரின் பேரில் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.