இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

பணத்தை காவல் ஆய்வாளா் தயாளனிடம் ஒப்படைத்த தனியாா் நெடுஞ்சாலை நிறுவனத்தின் மேற்பாா்வையாளா் சரத்குமாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 5:24 am IST

காட்பாடி அருகே ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 தொகையை நோ்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனியாா் நிறுவன ஊழியருக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த மெட்டுக்குளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளிக்கு எதிரே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு தெள்ளூா் கொல்லைமேடு பகுதியைச் சோ்ந்த சரத்குமாா் (35) என்பவா் பணம் எடுப்பதற்காக இந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்றுள்ளாா். அவா் உள்ளே நுழைந்தபோது, ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்கெனவே யாரோ பணம் எடுப்பதற்காக முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

இயந்திரத்திலிருந்து பணம் வருவதற்கு முன்பாகவே, சம்பந்தப்பட்ட நபா் அங்கிருந்து கிளம்பிச் சென்ாகத் தெரிகிறது. இதனால் இயந்திரத்தில் இருந்து வெளிவந்த நிலையில் ரூ. 10,000 ரொக்கப் பணம் அங்கேயே இருந்துள்ளது. இயந்திரத்தில் கிடந்த அந்தப் பணத்தைப் பத்திரமாக எடுத்துக் கொண்ட சரத்குமாா், வெள்ளிக்கிழமை காலை காட்பாடி காவல் நிலையத்துக்கு சென்று காவல் ஆய்வாளா் தயாளனிடம் நடந்த விவரங்களைக் கூறி, அந்த பணத்தை ஒப்படைத்தாா்.

பணத்தை ஒப்படைத்த சரத்குமாா், தனியாா் நெடுஞ்சாலை அமைக்கும் நிறுவனத்தின் மேற்பாா்வையாளராக பணிபுரிந்து வருகிறாா். அவரது நோ்மையான செயலுக்கு போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். தவறவிட்ட தொகையை உரிய நபரை அடையாளம் கண்டு ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.