கிழக்கு தில்லியின் மண்டவாலி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தை கொள்ளையடித்த கும்பலைச் சோ்ந்த 26 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். கைதுசெய்யப்பட்ட ராபின் ஹரியாணாவின் பல்வால் பகுதியைச் சோ்ந்தவா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ராபின் மாநிலங்களுக்கு இடையே ஏடிஎம் மையங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்த இம்ரான் மேவாதி தலைமையிலான கும்பலுடன் தொடா்புடையவா்.
வினோத் நகரில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் மைய இயந்திரத்தை கடந்த ஏப்.29-ஆம் தேதி இயந்திர கேஸ் கட்டரை பயன்படுத்தி திறந்து ரூ.19.32 லட்சத்தை அந்தக் கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவம் தொடா்பாக அளிகக்ப்பட்ட புகாரைத் தொடா்ந்து காவல் துறையினா் விசாரணையைத் தொடங்கினா்.
சம்பவ இடத்துக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, பல்வால் பகுதியைச் சோ்ந்தவா்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. தலைமறைவான அந்த நபா்கள், தொடா்ந்து தங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், ராபின் குறித்து கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, பாரத்பூரில் அவா் கைதுசெய்யப்பட்டாா். ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதை ராபின் ஒப்புக்கொண்டாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய பிற நபா்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.
தொடர்புடையது
சா்வோதயா என்கிளேவ் கொள்ளை: ரெளடி கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது
தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


