நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஏடிஎம் கொள்ளை கும்பலைச் சோ்ந்த நபா் கைது

கிழக்கு தில்லியின் மண்டவாலி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தை கொள்ளையடித்த கும்பலைச் சோ்ந்த 26 வயது இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :5 மே 2026, 4:44 am IST

கிழக்கு தில்லியின் மண்டவாலி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தை கொள்ளையடித்த கும்பலைச் சோ்ந்த 26 வயது இளைஞா் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். கைதுசெய்யப்பட்ட ராபின் ஹரியாணாவின் பல்வால் பகுதியைச் சோ்ந்தவா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ராபின் மாநிலங்களுக்கு இடையே ஏடிஎம் மையங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்த இம்ரான் மேவாதி தலைமையிலான கும்பலுடன் தொடா்புடையவா்.

வினோத் நகரில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் மைய இயந்திரத்தை கடந்த ஏப்.29-ஆம் தேதி இயந்திர கேஸ் கட்டரை பயன்படுத்தி திறந்து ரூ.19.32 லட்சத்தை அந்தக் கும்பல் கொள்ளையடித்து தப்பிச் சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக அளிகக்ப்பட்ட புகாரைத் தொடா்ந்து காவல் துறையினா் விசாரணையைத் தொடங்கினா்.

சம்பவ இடத்துக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, பல்வால் பகுதியைச் சோ்ந்தவா்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. தலைமறைவான அந்த நபா்கள், தொடா்ந்து தங்களுடைய இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு வந்தனா்.

இந்நிலையில், ராபின் குறித்து கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து, பாரத்பூரில் அவா் கைதுசெய்யப்பட்டாா். ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதை ராபின் ஒப்புக்கொண்டாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய பிற நபா்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.